top of page

#T43.மின்மினிகளுடன் வந்தாள்!

Writer's picture: Mani KannanMani Kannan

மின்மினிகளுடன் வந்தவள்

காட்டில் தீமூட்டிப் போனாள்

தீராத காயங்கள் தந்தாள்

மின்னலாய் மறைந்தாள்


முழுமதியாய் உலவியவள்

தேய்பிறைகள் காட்டினாள்


மழை நீராய் நுழைந்தவள்

கரை பெயர்த்து வெளியேறினாள்


என் முகவுரை தந்தவள்

பிரிவுரை ஆற்றாமல் போனாள்


அதிகாரம் கொண்ட அன்பானவள்

ஒரு அதிகாரமாகிப் போனாள்


குளிர்காலத்தில் புத்தாடையானவள்

கோடைகால மின்வெட்டாகிறாள்


சாளரம் வழியே வளியாய் வந்தவள்

பாதைகளில் புழுதி மண்டலம் செய்கிறாள்


மின்மினி கூட்டம் நான் பரிசளிக்கவே,

நிலவைக் கேட்டு சண்டையிட்டுப் போனாள்


நினைவுகளை உடன் அனுப்பி வைத்தவள்

நினைவுகள் நிற்கும் இடம் நோக்கி அழைக்கிறாள்


Love,



Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comments


bottom of page