top of page

#T47.கீறல் கொண்ட...(parody of ஆலங்குருவிகளா..)

Writer's picture: Mani KannanMani Kannan

கீறல் கொண்ட விளைநிலமே

உன் வலிகள் போற்றேனோ

கீறல் கொண்ட விளைநிலமே

உன் கீறல்கள் ஆற்றேனோ


அகழ்வாரைத் தாங்காதோ பூமி

பசியாற்ற கொண்டோமே பிறவி

இது இனிக்கும்


மண்ணில் வீழ்கின்ற விதைகள் யாவும்

உணவாகி உயிராய் பூக்குமே

இங்கே இல்லாமை இல்லாது போகும்

கொடையுள்ளம் கொண்டாலே


பாழாகிப் போன உலகத்துல

உனக்கும் உனக்குமே தூரம் இருக்கு

விழுந்த போதும் ஒன்றாக ஓடிட

சொல்ல மழை இருக்கு


நினைவிடம் அமைக்கிற எதுக்கு

ஒரு மரம் நட்டு வைத்திட பழகு

கிளிகள் குயில்கள் ஜன்னல் வரும்

ஜன்னல் தந்த மரம் இப்போ வாடி இருக்கு


அசையும் யாவும் அன்பினிலே

அதீதம் எல்லாம் கோடை செய்யவே


அவ்வப்போது நமக்காக அழுது

சிரிக்க வைக்கிறது முகிலு


இந்த வைகையில் எல்லாமும்

எல்லார்க்கும் என்றான போதும்

தனதென்று தான் போற்றுவான்

இயற்கையின் செய்கையை கூட

பூ தூவியே தூற்றுவான்!


Love,



Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...

Cover : Image by Free-Photos from Pixabay



 
 
 

Comments


bottom of page