#T47.கீறல் கொண்ட...(parody of ஆலங்குருவிகளா..)
- Mani Kannan
- Sep 28, 2019
- 1 min read
கீறல் கொண்ட விளைநிலமே
உன் வலிகள் போற்றேனோ
கீறல் கொண்ட விளைநிலமே
உன் கீறல்கள் ஆற்றேனோ
அகழ்வாரைத் தாங்காதோ பூமி
பசியாற்ற கொண்டோமே பிறவி
இது இனிக்கும்
மண்ணில் வீழ்கின்ற விதைகள் யாவும்
உணவாகி உயிராய் பூக்குமே
இங்கே இல்லாமை இல்லாது போகும்
கொடையுள்ளம் கொண்டாலே
பாழாகிப் போன உலகத்துல
உனக்கும் உனக்குமே தூரம் இருக்கு
விழுந்த போதும் ஒன்றாக ஓடிட
சொல்ல மழை இருக்கு
நினைவிடம் அமைக்கிற எதுக்கு
ஒரு மரம் நட்டு வைத்திட பழகு
கிளிகள் குயில்கள் ஜன்னல் வரும்
ஜன்னல் தந்த மரம் இப்போ வாடி இருக்கு
அசையும் யாவும் அன்பினிலே
அதீதம் எல்லாம் கோடை செய்யவே
அவ்வப்போது நமக்காக அழுது
சிரிக்க வைக்கிறது முகிலு
இந்த வைகையில் எல்லாமும்
எல்லார்க்கும் என்றான போதும்
தனதென்று தான் போற்றுவான்
இயற்கையின் செய்கையை கூட
பூ தூவியே தூற்றுவான்!
Love,
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Cover : Image by Free-Photos from Pixabay
Σχόλια