top of page

#T45.மனிதம் தேடி...

Writer's picture: Mani KannanMani Kannan

எங்களுடன் இருந்தீர்கள்

மக்களாய் வாழ்ந்தோம்

எங்கோ சென்றீர்கள்

மாக்களாய் நாங்களானோம்


எங்கள் ஆறாம் அறிவே

நீங்களன்றோ அஃறிணைகளே

சென்ற நூற்றாண்டில்

நீங்கள் எந்தன் உறவினர்களே


சேய் ஒன்றாய் நாய்

உனைக் கண்டோம்

எங்கள் திராணிகளே

நீங்களன்றோ பிராணிகளே


மதனம் தேடி நடக்கலானேன்

மனிதம் தொலைந்ததை உணர்ந்தேன்

கானகத்தில் இவையிரண்டும்

களித்திருக்க கண்டேன்!


திருடிச் சென்றான் மனிதத்தை

என் பொருள் திருடும் முன்

கொன்று விட்டான் மனிதத்தை

வாழ்கிறேன் என்ற எண்ணத்தில்


மனிதர்கள் மிருகங்கள்

ஆகிடல் இயலாது

மிருகங்கள் மனிதர்கள்

ஆகிடல் எளிது


சரணாலயங்கள் இங்கே

அன்பின் ஆலயங்கள்

காடுகளெல்லாம் இங்கே

அழுக்காறற்ற வீடுகள்


மனிதம் ஒரு நாள் மலரும்

அன்று இங்கே போர் இருக்காது

அன்று இங்கே கடவுச் சீட்டு இருக்காது

அன்று இங்கே இராணுவம் இளைப்பாறும்

அன்று இங்கே எல்லைகளில் வெளிகள் இருக்காது


மனிதம் மலராவிடின்

மனிதர்கள் மாளட்டும்

மயில்களுக்கு இரையாகட்டும்

பகுத்தறிய இயலாப்

பறவைகளுக்கு உணவாகட்டும்


ஆறாம் அறிவு பெற்றிருத்தல்

மனிதம் என்ற நிலை மாறி

ஆறாம் அறிவு களைதல்

மனிதம் என்றானதே!


பகுத்தறிய இயலா

ஒன்றை உடன் வளர்ப்போம்

மனிதம் கற்போம்!


Love,


Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...


cover : Image by Jonny Lindner from Pixabay


 
 
 

Comments


bottom of page