top of page

#T11.சாயும் காலம்...



கண்ட கணம் முதல் கண்ணில் நிறைந்தாய்.

மனம் எங்கும் மணம் வீசிடச் செய்தாய்.

நீ வந்த பின் என் அன்றாடம்

அது வாழ்ந்திட உன்னிடம் மன்றாடும்

கண் மூடிக் கேட்கும் இசையானாய்

கண் மூடியும் தெரியும் கனவானாய்.

மழை நேரத்தில் ஜன்னலோர தேநீரானாய்.

அழகை வரையறை செய்யச் செய்தாய்

என் சொல்லகராதி திருடினாய்

நான் பேசிட ம்ம்ம் மட்டும் விட்டுச் சென்றாய்

விளம்பர இடைவெளி தூக்கத்தில்

விளம்பரம் செய்யுது உனக்காக.

ஜன்னல் வழிச் சாரலாய் வந்தாய்,

நான் பயணம் செய்கையில்.

கேள்விகள் எழ வைத்தாய்,

உலகில் எதில் அழகில்லை என.

என் காற்றோடு நீர் தூவிச் சென்றாய்

இயலாது எனினும் எண்ணிப்

பார்த்திட வைத்தாய் விண்மீன்களை.

வானவில் மேல் நடக்கிறேனோ எனத்

தோன்ற வைத்தாய் தார்ச்சாலை மேல் நடக்கையில்.

நீ பார்வைகள் தெளித்துச் சென்றிட,

பூத்து நின்றது மனம்.

நீ சிரிப்பை வீசிச் சென்றிட

நொறுங்கி விட்ட மனம்.

இக்காயங்கள் மாய வேண்டுமெனில்

வர வேண்டும்

உன் தோள் சாயும் காலமே...

love,

Mani kannan

click here to subscribe


 
 
 

Comments


bottom of page