top of page

#T42.என் வழிகள் அழகாகும்!

Writer's picture: Mani KannanMani Kannan

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மாற்றி

பாசப்படுத்திய உணவுகள் தந்தாய்!


பஞ்சமில்லா பரபரப்புகள் மாற்றி

அமைதியின் செழுமை தந்தாய்!


அவசர அன்றாடங்கள் மாற்றி

நிழலிற்கு நிதானம் தந்தாய்!


ஒவ்வொன்றும் ஒரு விதமாய்,

எனினும் யாவுமாய் நீயாவாய்!


கோடையில் மண்வாசம் தேடியவனுக்கு

குளிர்காலத்தில் புத்தாடை ஆனாய்!


என் வாசல் வழி வந்து

வாழ்வின் வாசல் காட்டினாய்!


மொழியறியா பாடல் கூட

உன்னைப் பாடுதென உணர வைத்தாய்!


இன்றேனோ என் ஆடைகளின்

நிறங்களில் வானவில் தோன்ற வைத்தாய்!


சாளரம் வழித் தெரியும் உலகம்

சாதகமாய்த் தோன்ற வைத்தாய்!


வானத்தை இழுத்து வந்து

மொட்டை மாடியில் சேர்த்தாய்!


உரையாடல் ஒளிர்ந்திட

விண்மீன்கள் தூறி விட்டாய்!


விடை பெறும் வேளைகளில்

நினைவுகளை அனுப்பி வைத்தாய்!


என் வினாக்களை கொண்டே

எனக்கு விடையளித்தாய்!


இரவல் கேட்கும் இரவுகள் மாற்றி

விடியல் தேடும் கனவுகள் தந்தாய்!


பிரிவுகள் துயர் தரும் வேளைகளில்

எதிர்பார்ப்பில் நிவாரணம் தந்தாய்!


எதிர் காலம் பற்றி ஏங்கிய என்னை

நிகழ் கால நிழலில் இளைப்பாற்றினாய்!


ஏராளம் முதல் முறைகள் தந்து

என்னுலகத்தை புதிதாய் மாற்றினாய்!


முத்தெடுக்க மூழ்கிய என்னை

மிதந்த படி மேகங்கள் தொட வைத்தாய்!


உன் வார்த்தைகள் வாழ்வினை வளமாக்கும்!

உன் எதிர்பார்ப்பு என் வழிகளை அழகாக்கும்!


உன் விழிகள் என் கனவுகள் காணும்!

உன் விரல்கள் என் வழியைக் காட்டும்!



Love,


Mani kannan


Cover : Photo by Nathan Dumlao on Unsplash


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comments


bottom of page